குடியரசுத் தலைவர் தேர்தல்: கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்.. தம்பிதுரை!
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் தம்பிதுரை எம்பி நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று நேரில் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து தம்பிதுரை எம்பி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் தம்பிதுரை கூறினார். கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்று கூறிய தம்பிதுரை இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு செய்வார் என்றார். இந்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு திரும்பிய அவர் கட்சி தலைமைதான் இதுகுறித்து முடிவு செய்யும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications