தீவிரவாதியை சுட்டு கொன்ற போலீசை கண்டித்து கடையடைப்பு நடத்திய மக்கள்.. காஷ்மீரில்தான் இந்த நிலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து பொதுமக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதுடன், கடையடைப்பும் நடத்தினர்.
மாநில பாதுகாப்பின் அடித்தளத்தில் இருக்கும் ஓட்டையை கண்கூடாக காட்டும் இந்த சம்பவம் பற்றிய விவரம் இதுதான்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னல் நல்லா குத் பகுதியில் தீவிரவாதி ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார், பஸ் ஒன்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிக்கிய தன்வீர் ஹுசைன் ஷேக் என்ற தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசார் மீது அவன் தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக அவனை சுட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து பிஸ்டல், ஏகே-47 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
அவன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் ஓராண்டிற்கு பின் விடுதலை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் கடந்த மாதம் ஸ்ரீநகரில் மூன்று போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவன் என்றும் தெரியவந்தது.
ஆனால், தீவிரவாத இயக்கத்தோடு சம்மந்தப்பட்ட அவன் தற்போது திருந்தி குடும்பத்தோடு வாழ்ந்து வந்ததாக கொல்லப்பட்டவனின் சகோதரர் மீடியாக்களிடம் தெரிவித்தார். எனவே இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பெமினா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடையடைப்பில் ஈடுபட்டனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications