திருப்பதி கோயில் மீது 2வது முறையாக பறந்த விமானம்: கிளம்பிய சர்ச்சை
திருப்பதி: ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறக்க தடை விதிக்க கோரிக்கை விடுத்த பின்னரும், 10 நாட்களில் 2 வது முறையாக விமானம் பறந்துள்ளதால் தேவஸ்தான நிர்வாக அதிகாரிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த வெங்கைய நாயுடு தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதேபோல் திருப்பதி கோயிலின் ஆகம பண்டிதர்களும் ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறப்பது ஆகம முறைக்கு புறம்பானது. எனவே மாநில அரசு ஏழுமலையான் கோயில் அமைந்திருக்கும் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.
சமீபத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜுவும், ‘விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்திருந்தார்.
எனினும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோயில் கோபுரத்தின் மேலே விமானம் பறந்து சென்றது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் மீண்டும் விமானம் பறந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பாதுகாப்புக்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது என சாஸ்திர வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் கோபுரம் மேலே விமானங்கள் பறக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவஸ்தான நிர்வாகம், திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டாலும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, இந்த விவகாரம், விமான போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வராது.
ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளதால் ராணுவத்தினர் இதற்கு அனுமதி தந்தால் மட்டுமே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications