மோடி தலைமையில் 16ம் தேதி ‘மாநிலங்கள் கவுன்சில் கூட்டம்’... ஜெ. பங்கேற்பாரா?
டெல்லி: மாநிலங்கள் கவுன்சில் கூட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் வரும் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கடந்த 1990ம் ஆண்டு, ‘இண்டர் ஸ்டேட் கவுன்சில்' எனப்படும் மாநிலங்கள் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டமானது கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்தக் கவுன்சில் மாற்றி அமைக்கப்பட்டது. மண்டல அளவிலான அமைப்புகளை உருவாக்கியது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், ஐந்து மண்டலங்களில் கூட்டங்கள் நடந்தன. அப்போது, அந்தந்த மண்டலங்களில் இடம் பெற்றுள்ள, மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்று தங்களின் பிரச்னைகள் குறித்து பேசினர்.
இந்நிலையில், வரும் 1ம் தேதி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி மற்றும் மனோகர் பரீக்கர் ஆகியோரும், நிரந்தர அழைப்பாளர்களாக உள்ள 11 அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் பங்கேற்று, பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமருடன் ஆலோசிக்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள், உள்நாட்டு பாதுகாப்பு, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்முறைகள், கல்வி, நேரடி மானிய திட்டம், ஆதார், சிறந்த நிர்வாகம், சமூக, பொருளாதார திட்டங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஜெ. பங்கேற்பாரா?
இந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் டெல்லி அரசும், இந்தக் கூட்டத்தில் தங்களது பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசும் எனத் தெரிகிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இதில் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications