Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீன ராணுவம் இந்திய சிறுவனை கடத்தியிருக்கு.. மோடி மவுனம் ஏன்.. அக்கறை இல்லையா? ராகுல் சரமாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

இட்டானகர்: அருணாச்சல் பிரதேச சிறுவனை சீன ராணுவம் கடத்தியது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது அவருக்கு சிறுவன்மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் மிரம் தாரோன் என்ற 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். சியாங்க் மாவட்டத்தில் லுங்டா ஜோர் என்ற இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று மிரம் தாரோன் கடத்தப்பட்டிருக்கிறார்.

சீனாவிலிருந்து சாங்க்போ ஆறு இந்தியாவுக்குள் நுழையும் இடத்திற்கு அருகில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தாரோனுடன் இருந்த அவரது நண்பர் ஜானி யாயியாங் அங்கிருந்து தப்பிவந்து, மிரம் கடத்தப்பட்டத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கடத்தல்

கடத்தல்

அருணாச்சல் மாநிலத்தின் லுங்டா ஜோர் பகுதிக்குள் ஏற்கனவே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, ஏற்கெனவே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதும் 17 வயது சிறுவனைக் கடத்தி இருக்கிறார்கள். சிறுவனை மீட்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. தபீர் காவோ கோரிக்கை வைத்துள்ளார்.

 சீன ராணுவம்

சீன ராணுவம்

கடந்த 2020ம் ஆண்டும் இதேபோல அருணாச்சல் பிரதேசத்தின் மேல் சுபான்சிரி மாவட்டத்தில் 5 சிறுவர்களை சீன ராணுவம் கடத்திச் சென்று பின்னர் ஒரு வாரம் கழித்து விடுவித்தது. சீன ராணுவம் கடத்தலில் ஈடுபட்டதை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் உள்ளிட்டோரை டிவிட்டரில் டேக் செய்து கடத்தல் விவகாரம் தொடர்பாக‌ பாஜக எம்.பி தபீர் காபோ தகவல் தெரிவித்துள்ளார்.

 சிறுவர்கள்

சிறுவர்கள்

கடத்தல் நடந்த பகுதியான லுங்டா ஜோர் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் சாலை அமைத்தது. அதன்பிறகு 2020ம் ஆண்டு இதுபோலவே அருணாச்சலில் 5 சிறுவர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும் ஒரு வாரம் கழித்து விடுவித்தது சீன ராணுவம். தற்போது மீண்டும் ஒரு கடத்தலில் ஈடுபட்டுள்ளது.

Recommended Video

    அடங்காத China | Galwan Valley-யில் China Flag ஏற்றப்பட்டதா? | Oneindia Tamil
     ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    அருணாச்சலத்தில் சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''குடியரசு தின விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் எதிர்காலத்தை, 17 வயது சிறுவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. கடத்தப்பட்ட சிறுவன் தாரோனின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதலாக உள்ளோம். நம்பிக்கை விட்டு விட வேண்டாம். நாம் நிச்சயம் வீழ மாட்டோம். பிரதமர் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார். அதுவே அவரது அலட்சியத்தை வெளிக்காட்டி விட்டது. சிறுவன் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+