காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்ற கெடு முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஆறு வார கெடு நாளை முடிவடைய உள்ளது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் மற்றும் தொழில்நுட்பக்குழு அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் மத்திய நீர்வளத்துறைச் செயலரை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தைத் தவிர வேறு எந்த ஒரு அமைப்பையும் ஏற்க முடியாது என்று தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவிரி வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர்நாப்தேவை சந்தித்து தமிழக அதிகாரிகள் உரையாடினர்.
அப்போது, உச்சநீதிமன்றத்தின் கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்று தமிழக அரசுக்கு வழக்கறிஞர் சேகர்நாப்தே பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 31ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications