நீங்கள் பொய் சொல்வதை நிரூபித்தால் தோப்புக்கரணம் போட வேண்டும்.. சரியா? மோடிக்கு மம்தா செம சவால்!
கொல்கத்தா: மாத்துவா சமூகத்தினருக்கு நான் நிறைய செய்திருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி எதையும் செய்யவில்லை என்பதை நிரூபித்தால் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
மதம் குறித்து தேர்தல் பரப்புரையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதால் அவர் தேர்தல் பரப்புரையில் 24 மணி நேரத்திற்கு ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதிக்கப்பட்டது.
இதை கண்டித்து நேற்றைய தினம் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து பராசாத் பகுதியில் தனியொருவராக ஒற்றை நாற்காலியை போட்டுக் கொண்டு போராட்டத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டிருந்தார்.

மாத்துவா சமூகம்
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் மாத்துவா சமூகம் உள்பட சிறுபான்மையினருக்கு மம்தா பானர்ஜி எந்த நல்லதையும் செய்யவில்லை.

மோடியின் சவால்
ஆனால் மத்திய அரசு அவர்களின் நலனுக்காக நிறைய திட்டங்களை வகுத்துள்ளது. அந்த சமூகத்தினருக்கு தான் செய்ததை விளக்க மம்தா தயாரா என மோடி சவால் விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் மம்தா பானர்ஜி பேசுகையில் மோடியின் சவாலை நான் ஏற்கிறேன்.

தோப்புக்கரணம்
நான் மாத்துவா சமூகத்தினருக்கு எதையும் செய்யவில்லை என்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். ஒரு வேளை அவர் எதையும் செய்யாமல் பொய்யை மட்டுமே சொல்லி வருகிறார் என்பது நிரூபணமானால் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டால் போதும்.

5ஆவது கட்டம்
வாக்குப் பதிவு நடைபெறும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்வது ஏன்? மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இத்தனை ஆண்டுகளாக இப்படி நடந்ததில்லை. இதுவரை 4 கட்டங்கள் முடிந்துள்ளன. அடுத்த கட்ட, அதாவது 5ஆவது கட்ட தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மோடி பிரச்சாரம்
வாக்குப் பதிவு நாட்களில் மோடி பிரச்சாரம் செய்வதை தேர்தல் ஆணையம் ஏன் தடுப்பதில்லை? தேர்தல் நாளன்று பொதுக் கூட்டங்களை ரத்து செய்ய நான் தயாராக உள்ளேன். மோடி ஒரு பொய்யர், தனது பொய்களால் மக்களை பிரதமர் மோடி தவறாக வழி நடத்துகிறார் என சரமாரியாக பேசினார் மம்தா பானர்ஜி.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications