உத்தரகண்ட் பெரு வெள்ளம்: 26 உடல்கள் மீட்பு... சுழற்சி முறையில் இரவு, பகலாக மீட்பு பணி தீவிரம்!
டேராடூன்: உத்தரகண்டில் வெள்ளப்பெருக்கு காரணமாக தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை இந்தோ திபத் காவல் படையினர் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இரவு 8 மணி நிலவரப்படி 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 171 பேர் மாயமாகி உள்ளதாகவும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சுரங்கதத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

திடீர் வெள்ளம்
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள தவுலிகங்கா ஆற்றில் நேற்று திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியிலுள்ள பனிப்பாறை ஒன்று வெடித்ததில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்
திடீரென்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தபோவனிலுள்ள சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகளில் தற்போது இந்தோ திபத் போலீஸ் படையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு, பகலாக மீப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலர் மாயம்
இந்த நிலையில் தபோவன் சுரங்கத்தில் இருந்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மாயமாகி உள்ளதாகவும், இந்த் சுரங்கதத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை
இந்த மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுரங்கத்தில் எவ்வளவு பேர் உயிருடன் உள்ளனர் என்பதைக் கண்டறிய உதவும் கருவிகளுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சுரங்கம் சுமார் 1500 மீட்டர் நீளமுடையதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுரங்கத்திற்கு ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருப்பதால் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சவாலாக மாறியுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு தெரிவித்துள்ளது. தொடந்து சுழற்சி முறையில் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications