உத்தரகண்ட் பெரு வெள்ளம்: 26 உடல்கள் மீட்பு... சுழற்சி முறையில் இரவு, பகலாக மீட்பு பணி தீவிரம்!
டேராடூன்: உத்தரகண்டில் வெள்ளப்பெருக்கு காரணமாக தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை இந்தோ திபத் காவல் படையினர் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இரவு 8 மணி நிலவரப்படி 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 171 பேர் மாயமாகி உள்ளதாகவும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சுரங்கதத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

திடீர் வெள்ளம்
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள தவுலிகங்கா ஆற்றில் நேற்று திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியிலுள்ள பனிப்பாறை ஒன்று வெடித்ததில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்
திடீரென்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தபோவனிலுள்ள சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகளில் தற்போது இந்தோ திபத் போலீஸ் படையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு, பகலாக மீப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலர் மாயம்
இந்த நிலையில் தபோவன் சுரங்கத்தில் இருந்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மாயமாகி உள்ளதாகவும், இந்த் சுரங்கதத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை
இந்த மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுரங்கத்தில் எவ்வளவு பேர் உயிருடன் உள்ளனர் என்பதைக் கண்டறிய உதவும் கருவிகளுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சுரங்கம் சுமார் 1500 மீட்டர் நீளமுடையதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுரங்கத்திற்கு ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருப்பதால் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி சவாலாக மாறியுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு தெரிவித்துள்ளது. தொடந்து சுழற்சி முறையில் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications