கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் நரேந்திர மோடி!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றி போது கேரள மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்துக்கு இரண்டு பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி திருச்சூரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், கேரளா மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் முன்னதாகவே இங்கு வந்திருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், மாநிலத்தில் அரசியல் வரலாற்றை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், பாரதீய ஜனதா மற்றும் அதனுடைய கொள்கைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 வருடங்களில் 200-க்கும் அதிகமான பாரதீய ஜனதா தொண்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். கேரளாவில் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். உயிர்த்தியாகம் செய்த அனைத்து பாரதீய ஜனதா தொண்டர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
கேரளாவில் பாஜக மூன்றாவது சக்தியாக உருவெடுத்து உள்ளது.
கேரளாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக பாஜக வரும். கேரளாவின் தலைவிதியை மாற்றும். என்று கூறிய பிரதமர் மோடி, கேரளாவில் ஆட்சி செய்யும் இரு கூட்டணியும் மக்களை ஏமாற்றி வருகிறது. ஒரு கூட்டணி ஆட்சிக்கு வருகிறது, மக்களை ஏமாற்றுகிறது. மக்கள் ஒவ்வொரு 5 வருடங்களும் கோபம் அடைகின்றனர், அப்போது ஆட்சியில் இருக்கும் கூட்டணியை வெளியேற்றுகின்றனர், அப்போது மற்றொரு கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.
இந்த சுழற்சியானது இதுவரையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு கூட்டணியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு மக்களை கொள்ளை அடித்து வருகின்றனர். ஆனால் இப்போது கேரளா மக்கள் மேலும் கோபம் அடைய தேவையில்லை. கேரளாவில் மூன்றாவது சக்தி உருவெடுத்து உள்ளது. இது கடவுள் சிவனின் மூன்றாவது கண்ணை போன்றது, இது பாவங்களை அழிக்கும், தீயவர்கள் மற்றும் ஊழலிடம் இருந்து விடுதலை அளிக்கும். மூன்றாவது சக்தியானது, கேரளாவின் எதிர்காலத்தை மாற்றும் மாநிலத்திற்கு வளர்ச்சி மற்றும் அமைதியை கொண்டு வரும்.
2022- ஆம் ஆண்டு இந்தியா இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் போது, அனைவருக்கும் சொந்த வீடு இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கனவு என்று மோடி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications