வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால்... கோவாவில் உருகிய பிரதமர்..!
கோவா: மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இன்னும் கொஞ்சகாலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால் கோவா விடுதலை பெற இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படை வீரர்கள் கடந்த 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஆபரேசன் விஜய் என்ற திட்டத்தின் மூலம் மீட்டது. இந்த போரில் ஈடுபட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்ஃப் 19ஆம் தேதி கோவா விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கோவாவின் 60வது விடுதலை தின விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் கோவா பல்கலைக்கழக மைதானத்திற்க் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வரவேற்றார். தொடர்ந்து தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்க ஆசாத் மைதானம் வந்தடைந்த அவர், தியாகிகள் நினைவிடத்தில்மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பாய்மர கண்காட்சி
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பனாஜியில் பாய்மர அணிவகுப்பு மற்றும் ஃப்ளைபாஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து கோவா விடுதலையின் 60வது ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தலீகாவோவில் உள்ள டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்திற்கு அவர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அரசு துறைகள், நபார்டு வங்கி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

வீரர்களை பராட்டிய மோடி
கோவா விடுதலை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் "ஆபரேஷன் விஜய்" வீரர்களை பாராட்டிய மோடி, ஃபோர்ட் அகுவாடா சிறை அருங்காட்சியகம், கோவா மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக், புதிய தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனை, மோபா விமான நிலையத்தில் விமானத் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் டபோலிம்-நவேலிமில் எரிவாயு இன்சுலேட்டட் துணை நிலையம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கொங்கனியில் மொழியில் வரவேற்பு
கொங்கனி மொழியில் கோவா மக்களை வரவேற்று தனது உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் கோவா விடுதலை பெற இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்காது என்று கூறினார்.

நல்லாட்சியில் கோவா முதலிடம்
நல்லாட்சியில் கோவா முதலிடத்தில் உள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, 450 ஆண்டுகள் போர்ச்சுகல் ஆட்சிக்கு பிறகும் இந்தியாவுடனான தொடர்பை கோவா இழக்கவில்லை என்று ம் அது இன்றும் இந்தியாவின் முக்கிய அங்கமாக திகழ்வதாகவும், அதற்காக கோவா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் , அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications