மத்திய அமைச்சக அதிகாரிகள் காலை 9 மணிக்கு "உள்ளேன் ஐயா" சொல்ல உத்தரவு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசில் மத்திய அமைச்சக அதிகாரிகள் காலை 9 மணிக்கு கண்டிப்பாக அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச அமைச்சர்கள், அதிகபட்ச நிர்வாகம் என்ற மந்திரத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவ்யில் உள்ள மத்திய அமைச்சர்கள் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் காலை 9 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.30 மணிக்கு வேலை முடிந்து செல்ல வேண்டும். 30 நிமிடம் உணவு இடைவேளை. பணி நேரத்தில் அலுவலர்கள் அனைவரும் இருக்கைகளில் இருக்க வேண்டும், இதர முக்கிய காரணங்களுக்கு மட்டும் இருக்கைகளை விட்டு செல்லலாம். இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகள் முடக்கத்தால், அலுவலர்கள் பெரும்பாலும் செயலற்றவர்களாக ஆகிவிட்டதை உணர்ந்த பின்னரே இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளை தங்கள் அமைச்சகத்தின் திட்டங்களை தயாரித்தல், நிறைவேற்ற வழிகாணுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவார்கள்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஊரக மேம்பாட்டு மந்திரியாக இருந்த ஜெய்ராம் ரமேஷ் உள்பட சில குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டுமே அதிகாரிகளை விரைவாக முடிவுகள் எடுக்கும்படி துரிதப்படுத்தினர். புதிய அரசின் இந்த உத்தரவுகள், வேகமாக பணிகள் நடைபெற உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications