ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் போர்க்கொடி!!
டெல்லி: ராகுல் காந்தி இளைஞர் காங்கிரசுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதாலா கடுமையாகத் தாக்கி உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்துக்கு அதன் துணைத்தலைவர் ராகுல் காந்திதான் தலைமை ஏற்றிருந்தார். எனவே இந்த தோல்விக்கும் அவர்தான் காரணம் என விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் டி.எச்.முஸ்தபா, ராகுலை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ராகுல் ஒரு கோமாளி போல நடந்துகொண்டார். அதன் காரணமாகத்தான் தேர்தலில் காங்கிரஸ் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது. அவர் தாமாக பதவியிலிருந்து விலகாவிட்டால் அவரை நீக்க வேண்டும் என்றார்.
இதற்காக அவர் கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதேபோல் ராகுலை விமர்சித்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநில உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதாலாவும் ராகுல் காந்தியை தாக்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர், ராகுல் காந்தி இளைஞர் காங்கிரசுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார். இளைஞர் காங்கிரசுடன்தான் கூடுதலாக பணியாற்றுகிறார். ராகுல் காந்திக்கும், மக்களுக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் இணைவதற்கான காலம் கனிந்து விட்டது என்றார்.
இக்கருத்தை தெரிவித்ததற்காக அனேகமாக ரமேஷ் சென்னிதாலா மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications