இரண்டு நாளில் 3-வது முறையாக ராகுல் காந்தி கைதாகி விடுதலை.. டெல்லியில் பரபரப்பு !
டெல்லியில் கடந்த இரண்டு நாளில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி போலீசார் நேற்று மாலை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது உடலை பார்க்கச் சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே இரண்டு முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் ராகுல்.

இந்த நிலையில் ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த ராகுலை இந்தியா கேட் அருகே டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி மீண்டும் கைது செய்தனர். முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ராகுல் உடனடியாக துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இரண்டு மணி நேரத்திற்கு பின்பு அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களில் ராகுல் கைதாகி விடுதலை ஆவது இது மூன்றாவது முறை ஆகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications