பட்ஜெட்டில் புதிய வகை ரயில்கள் அறிமுகம்.. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு முக்கியத்துவம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்பதிவு செய்யாமல் பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2016-17ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து இதுகுறித்து சுரேஷ் பிரபு தெரிவித்ததாவது:

- நெடுந்தூர ஊர்களுக்கு நடுவே 'அந்தியாதயா எக்ஸ்பிரஸ்' என்ற சூப்பர் பார்ஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிகமும் செய்யப்படும். பயணிகள் கூட்டம் அதிகமுள்ள நகரங்கள் நடுவே இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில் முழுக்க முன்பதிவற்றதாகும்.
- நெடுந்தூர நகரங்களுக்கு நடுவே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு முன்பதிவற்ற ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். குடிநீர் வசதி, கூடுதல் செல்போன் சார்ஜ் பாயிண்டுகள் கொண்ட இந்த பெட்டிகள், தீன் தயாளு கோச் என்று அழைக்கப்படும்.
- முழுக்க 3 அடுக்கு ஏசி வசதி கொண்ட ரயில்கள் ஹும்சபார் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும். இதில், உணவு ஆர்டர் செய்யவும் வாய்ப்பு உண்டு.
- தேஜாஸ் என்ற பெயரில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் துரித வேக ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். வருங்கால துரித ரயில்களின் முன்னோடியாக இந்த வகை ரயில்கள் இருக்கும்.
- தானியங்கி கதவு, பொழுதுபோக்கு ஸ்க்ரீன் வசதி, பார்கோட் ரீடர் போன்றவை கொண்ட நவீன ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும்.
- பயணிகள் நெரிசல் அதிகமுள்ள ரூட்டுகளில் இரவு நேர டபுள் டக்கர், ஏசி ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். இது 40 சதவீத நெரிசலை குறைக்கும். இவ்வாறு சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
- இந்த ஆண்டு வைஃபை வசதி 100 ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 400 ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். இதனால் இலவச இணையதள வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பட்ஜெட்டில் புதிய ரயில்களை அறிமுகம் செய்யவில்லை என்றபோதிலும், இதுபோன்ற புதியவகை ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வகை ரயில்கள் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications