"வெறி"யர்களின் அடுத்த அராஜகம்.. "பசு மாட்டை எங்கே கடத்திட்டு போறீங்க".. இளைஞர் அடித்தே கொலை.. ஷாக்
பசுக்களை கடத்தியதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்
ஜெய்ப்பூர்: பசுக்களை கடத்தி சென்றதாக சந்தேகப்பட்டு, 2 பேரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது.. இதில் ஒருவர் துடிதுடித்து இறந்துவிட்டார்.. இன்னொருத்தர் சீரியஸாக இருக்கிறார்...!!
ராஜஸ்தானை பொறுத்தவரை அவர்களின் தொழில் கால்நடை வளர்ப்புதான்.. அதனால்தான நாட்டின் 2வது பெரிய கால்நடை வர்த்தகமாக ராஜஸ்தான் திகழ்கிறது..
ஆனால் கடந்த முறை இங்கு நடந்த பாஜக ஆட்சியில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அராஜகத்தில் தொடர்ந்து ஈடுட்டு வருகின்றனர்.

இறைச்சி
2017-ல், பெலுகான் என்பவர் ஜெய்ப்பூரில் இருந்து சில பசுமாடுகளை வாங்கி கொண்டு தன்னுடைய ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போதுதான், பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் சில குண்டர்கள் அவரை வழிமறித்தனர்.. இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதாக சொல்லி அவரை சரமாரியாக தாக்கினர்.. கடைசியில் இதில் பெலுகான் இறந்தே விட்டார்.. இப்படித்தான் மெல்ல மெல்ல, பசுபாதுகாவலர்கள் தலைதூக்கினர்..

வியாபாரி
"பசு மாடுகளை யாராவது கடத்தினாலும் சரி, வெட்டினாலும் சரி, கொல்லப்படுவார்கள்" என்று பாஜக எம்எல்ஏவே ஒருமுறை சொல்லி இருந்ததை இங்கு நினைவுகூற வேண்டி உள்ளது... இப்போதும் அதுபோலவே, ஒரு கொடிய சம்பவம் நடந்துள்ளது.. மத்திய பிரதேசத்தின் அச்சல்பூரை சேர்ந்தவர் பாபு லால் பில்.. இவர் நண்பர் பெயர் பிந்து.. இவர்கள் 2 பேரும் வேனில் மாடுகளை ஏற்றி கொண்டு ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தனர்.

தாக்குதல்
சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்கு சென்றபோது, அங்கே ஒரு கும்பல் இவர்களை திடீரென வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளது... மாடுகளை எங்கே கொண்டு போகிறீர்கள்? கடத்தி கொண்டு போகிறீர்களா? என்று கேட்டு, அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்க ஆரம்பித்துவிட்டது.

தப்பி ஓட்டம்
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.. ஆனால், அதற்குள் அந்த கும்பல் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த ஆவணங்களையும் செல்போன்களையும் பறித்து கொண்டது.. போலீசாரை பார்த்ததும் எகிறி தப்பி ஓடியது.. படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் வழியிலேயே பாபு லால் பில் இறந்துவிட்டார்..

விசாரணை
பிந்து படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்... அவரது நிலைமை இப்போது சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் ஐஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..இதுகுறித்து அவர் சொல்லும்போது, சம்பவம் தொடர்பாக ஒருசிலரை நாங்கள் பிடித்து விசாரணை நடத்திவருகிறோம்... இதில் குற்றம் சாட்டப்பட்ட யாரையும் தப்பிக்க விடமாட்டோம்.. விரைவில் எல்லோருமே கைதாவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக
எனினும், நாளுக்கு நாள், இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உயிர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது... அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்துள்ளது... அதுவும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பிறகு இது மேலும் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..!
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications