டெபாசிட் ஆன பழைய ரூபாய் நோட்டு விவரங்களை ஈமெயிலில் தெரிவியுங்கள்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை வங்கிகள் இன்று மாலையே இ-மெயில் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மும்பை: வங்கி கணக்குகளில் இன்று டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை வங்கிகள் இன்று மாலையே இ-மெயில் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக 50 நாள் காலக்கெடு முடிவடைந்து. இதனிடையே வங்கி கணக்குகளில் பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்துவதற்கு இன்றே கடைசி நாளாகும்.
இந்நிலையில் இன்று டெபாசிட் ஆகி உள்ள செல்லாத ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் குறித்த விவரங்களையும் வங்கி நேர முடிவில் எவ்வளவு தொகை இருக்கிறது என்னும் தகவலை உடனடியாக இமெயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை, தனியார், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் தங்கள் கிளைகளில் எவ்வளவு பழைய நோட்டுகள் தொகை உள்ளது என்பதை ஒருங்கிணைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், டிசம்பா 31ம் தேதிக்குப் பிறகு இந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியின் சொத்தாக வைத்துக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications