1.5 கோடி மகளுக்கு வரதட்சணை கொடுத்த டீக்கடைக்காரர்... சம்மன் அனுப்பிய ஐடி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டீ வியாபாரி தனது மகள்களுக்கு ரூ.1.5 கோடி வரதட்சணை வழங்கியுள்ளார். அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஜெய்ப்பூர்: மகளின் திருமணத்திற்காக கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கொடுத்த டீக்கடைக்காரருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த டீக்கடைக்காரர் தலைமறைவாகி விட்டார்.
நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின்னர் கறுப்பு பணம், கள்ள பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒவ்வொரு பண பரிவர்த்தனையும் வருமான வரித்துறையின் பார்வைக்கு செல்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோத்புட்லி என்ற இடமருகே ஹடுவாடா என்ற பகுதியை சேர்ந்தவர் ராம் குஜார். டீக்கடை நடத்தி வரும் இவர் தனது மகள் திருமணத்திற்காக ரூ.1.5 கோடி வரதட்சணை பணம் கொடுத்துள்ளார்.
இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் வீட்டாருக்கு கட்டுக்கட்டாக பணத்தை வரதட்சணையாக வழங்கியுள்ளார். இந்த பணத்தை பலர் ஊர் முக்கியபிரமுகர்கள் முன்னிலையில் மணமகன் வீட்டாரிடம் கொடுத்தார். இதனை சிலர் வீடியோக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
இதையடுத்து, இந்த விவாகாரம் வருமான வரித்துரை கவனத்திற்கு சென்றது. பணம் சம்பாதித்ததன் மூலாதாரம் குறித்து விளக்கமளிக்குமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பணம் சம்பாதித்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், குஜ்ஜார் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார்.
இதனால் தவறான வழியில் சம்பாதித்த பணமா என்ற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு கோடிக்கணக்கில் வரதட்சணைக் கொடுக்கப் போய் இப்படி மாட்டிக்கொண்டாரே என்று ஆதங்கப்படுகின்றனர் உறவினர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications