அரபிக் கடலில் “வீர சிவாஜி” சிலை – ரூ. 1900 கோடி நிதி ஒதுக்கியது மகாராஷ்டிர அரசு
மும்பை: மகாராஷ்டிரா அரசின் சார்பில் அரபிக் கடலில் அமைக்கப்பட உள்ள வீரசிவாஜியின் மிகப் பெரிய நினைவிடத்திற்கு ரூபாய் 1900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு.
குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய இரும்பு சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் பட்நாவிஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மும்பையில் அரபி கடலில் வீரசிவாஜிக்கு சிலையுடன் கூடிய மிகப் பெரிய நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மும்பையில் உள்ள நாரிமன் முனையில் இருந்து சுமார் 2.6 கிமீ தொலைவில் அரபி கடலில் 16 ஏக்கர் பரப்பளவில் பாறை தீவாக இது அமைக்கப்பட உள்ளது.
அதன் மைய பகுதியில் 19 அடி உயரத்திற்கு வீர சிவாஜியின் சிலை அமைய உள்ளது. இதற்கான பணிகளை மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.
இந்த நினைவிடம் மும்பை ராஜ்பவனில் இருந்து 1.2 கிமீ தொலைவில் கடலில் அமைகிறது. ஏற்கனவே மும்பை தாக்குதல், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த நினைவிடத்திற்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் அடங்கிய தனியான பாதுகாப்புத்துறையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூபாய் 1900 கோடியில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளது.
2019 இல் இந்த நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டதும், நாள் ஒன்றிற்கு சுமார் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வரை வந்து செல்வர் என்றும் மதிப்பிடப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications