குருகோபிந்த் சிங்க் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 350 நாணயம்... ரிசர்வ் வங்கி திட்டம்!
குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ரூ.350 நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.
டெல்லி : 10வது சீக்கிய மத குருவான குருகோபிந்த் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 350 நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளையொட்டி, ரூ.350 நாணயம் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகமும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. 35 கிராம் எடையில் 50 சதவீதம் சில்வர் கொண்டு இந்த நாணயம் உருவாக்கப்பட உள்ளது. 40 சதவீதம் காப்பர் மற்றும் 5 சதவீதம் நிக்கல் மற்றும் துத்தநாகம் கலந்து இந்த நாணயம் தயாரிக்கப்படுகிறது.
44 மி.மீ., வட்டத்தில் 350 என அச்சிடப்பட்டு சிங்க உருவம் பொறிக்கப்பட்டதற்கு கீழே இந்த எண் அச்சிடப்படும். நாணயத்தின் மறுபக்கத்தில் தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பட்னா சாஹிப் உருவம் பதிக்கப்படும். இந்த நாணயங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.