இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது... அடுத்து என்ன செய்யலாம்?
இன்று நள்ளிரவு முதல் ரூ500; ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இன்று நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-க்குள் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள்லாம்; தவிர்க்க் இயலாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-ந் தேதி வரையும் மாற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்து செய்ய வேண்டியது என்ன?
- இன்று நள்ளிரவு முதல் ரூ500; ரூ1,000 நோட்டுகள் செல்லாது.
- ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள 50 நாட்கள் அவகாசம்
- நவ.10 முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை ரூ500; ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றலாம்.
- அஞ்சலகங்கள், வங்கிகளில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றலாம்
Here is what you can do. #IndiaFightsCorruption pic.twitter.com/jtoCuXFohF
— PMO India (@PMOIndia) November 8, 2016
- அரசு மருத்துவமனை, பெட்ரோல் பங்குகளில் நவ. 11-ந் தேதி வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லும்
- ரூ500, ரூ2,000 புதிய வகை நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- டிசம்பர் 30-க்குள் தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-க்குள் மாற்றலாம்
- நாடு முழுவதும் வங்கிகள் நாளை மூடப்படும்.
- வங்கி, அஞ்சலகங்களில் எந்த பணபரிவர்த்தனையும் நடைபெறாது.
- நாளையும் நாளை மறுநாளும் நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படும்.
- விமான நிலையம், ரயில் டிக்கெட், மருந்தகங்களில் ரூ500, ரூ1,000 தற்காலிகமாக செல்லும்
- சர்வதேச விமான நிலையங்களில் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.- நவம்பர் 10-ந் தேதி முதல் புதிய ரூ500, ரூ1,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும்.
- பணத்தை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் அவசியம்- மாநில அரசின் பால் விற்பனை நிலையங்களிலும் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லும்.
- இடுகாடுகள், மயானனங்களிலும் நவம். 11-ந் தேதி வரை வரை ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லும்
- தொடக்கத்தில் நாளொன்றுக்கு ரூ10,000, வாரத்துக்கு ரூ20,000 மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். பின்னர் இந்த தொகை அதிகரிக்கப்படும்.
- ரூ500, ரூ1000 நோட்டுகளை ரூ4,000 வரை எந்த ஒரு வங்கி மற்றும் அஞ்சலகத்திலும் உரிய அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக் கொள்ள முடியும். இந்த ரூ4,000 அளவுக்குதான் மாற்றலாம் என்கிற கட்டுப்பாடு நவம்பர் 24-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
- டிசம்பர் 30-ந் தேதிக்கு பின்னர் ரூ500, ரூ1000 நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் மாற்றிக் கொள்ளலாம்
- செக், டிடி, டெபிட், கிரெட்டிட் கார்ட் பணபரிவர்த்தனைகளில் கட்டுப்பாடு எதுவும் இல்லை
இவ்வாறு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications