சபரிமலை கோயில் மகர விளக்கு பூஜைக்காக திறப்பு,. குவாரண்டைனில் மேல்சாந்தி.. பரவும் கொரோனா
சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடைதிறக்கப்பட்ட நிலையில், சபரிமலை கோயில் மேல்சாந்தி தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜன் பொட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சபரிமலையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பபன் கோயில் மண்டல பூஜையையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது.சன்னதிக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் கோயிலுக்கு வரும் போது சமர்பிக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சன்னதி வந்த பின்னர் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பம்பை ஆற்றில் குளிக்க தடை. போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 2000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த சூழலில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. டிசம்பர் 31ஆம் தேதி (நாளை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி 5000 பேர் அனுமதிக்கப்படுவார்கள் .மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோயில் நடை மீண்டும் ஜனவரி 20ஆம் தேதி அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துளளது,
இந்நிலையில் கோயில் மேல்சாந்தி தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜன் பொட்டி கொரோனா தொற்று அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மேல்சாந்தி வி.கே.ஜெயராஜன் சபரிமலையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications