சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு மிரட்டல்... சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்கக் கோரி பொதுநலன் வழக்கை தொடர்ந்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாம் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரரான இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நவுஷத் அகமது கான் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் பொதுநலன் வழக்கைத் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏன் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழையக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும் சபரிமலை அனைவருக்கும் பொதுவான கோவில். இங்கு வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்திலும் இடமில்லை. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற மரபு கடந்த 1,500 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தது.
நாடு முழுவதும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் பொதுநலன் வழக்கை தொடுத்த இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் நவுஷத் அகமது கான், வழக்கை திரும்ப பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்த வழக்கை தாக்கல் செய்ததது முதல் தனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருகிறது; அமெரிக்காவில் இருந்து பலரும் மிரட்டுகின்றனர் என்றும் அவர் முறையிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர், ஒரு பொது நலன் வழக்கு தொடர்பபட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதை திரும்ப பெற முடியாது என்றனர். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக தேவைப்பட்டால் ஓர் ஆலோசகர் நியமிக்கப்படுவார். பெண்களுக்குரிய உரிமை குறித்த இந்த வழக்கை திடீரென்று திரும்ப பெற முடியாது என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications