ஷீரடி முழுவதும் பந்த்.. கடைகள் அடைப்பு.. ஆனா சாய்பாபா கோயில் திறப்பு.. அலைமோதும் பக்தர்கள்
புனே: சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்தை தொடர்ந்து ஷீரடி முழுவதும் பந்த் போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. எனினும் சாய்பாபா கோயில் திறந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் சாய்பாபாவுக்கு பெரிய கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மாநிலத்தின் பிரபல ஆன்மீகத் தலமாகவும் ஷீரடி மாறியுள்ளது. இந்த இடத்தில் சாய்பாபா அதிக நாட்கள் வாழ்ந்ததால் அவர் அங்கு பிறந்திருக்கலாம் என பலரால் நம்பப்படுகிறது.

பாத்ரீ
இந்த நிலையில் சாய்பாபாவின் பிறந்த ஊர் பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரீ என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கோயில் நிர்வாகம்
பாத்ரீயில் சாய்பாபா கோயில் அமைக்கப்படும் என கூறியிருப்பதால் ஷீரடிக்கு வரும பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால் இன்று முதல் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்ததாக கூறப்பட்டது.

பக்தர்கள் குழப்பம்
இதைத் தொடர்ந்து ஷீரடி கோயில் இன்று முதல் மூடப்படுவதாக கூறியது வதந்தி. கோயில் திறந்திருக்கும் என கோயில் அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்திருந்தார். எனினும் இன்று முதல் ஷீரடி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் குழப்பமடைந்தனர்.

கோயிலில் உணவு
இந்த நிலையில ஷீரடியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் கோயில் திறந்துள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலில் உணவு, தண்ணீர் வழங்கப்படுவதால் பக்தர்களுக்கு எந்த சிரமும் இருக்காது என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை
உத்தவ் தாக்கரே தனது கருத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையை சுமூகப்படுத்த நாளை ஷீரடியில் உள்ள மக்கள், முக்கிய தலைவர்களுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications