ஷீரடி முழுவதும் பந்த்.. கடைகள் அடைப்பு.. ஆனா சாய்பாபா கோயில் திறப்பு.. அலைமோதும் பக்தர்கள்
புனே: சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்தை தொடர்ந்து ஷீரடி முழுவதும் பந்த் போராட்டத்தால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. எனினும் சாய்பாபா கோயில் திறந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் சாய்பாபாவுக்கு பெரிய கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மாநிலத்தின் பிரபல ஆன்மீகத் தலமாகவும் ஷீரடி மாறியுள்ளது. இந்த இடத்தில் சாய்பாபா அதிக நாட்கள் வாழ்ந்ததால் அவர் அங்கு பிறந்திருக்கலாம் என பலரால் நம்பப்படுகிறது.

பாத்ரீ
இந்த நிலையில் சாய்பாபாவின் பிறந்த ஊர் பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரீ என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கோயில் நிர்வாகம்
பாத்ரீயில் சாய்பாபா கோயில் அமைக்கப்படும் என கூறியிருப்பதால் ஷீரடிக்கு வரும பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால் இன்று முதல் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்ததாக கூறப்பட்டது.

பக்தர்கள் குழப்பம்
இதைத் தொடர்ந்து ஷீரடி கோயில் இன்று முதல் மூடப்படுவதாக கூறியது வதந்தி. கோயில் திறந்திருக்கும் என கோயில் அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்திருந்தார். எனினும் இன்று முதல் ஷீரடி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் குழப்பமடைந்தனர்.

கோயிலில் உணவு
இந்த நிலையில ஷீரடியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் கோயில் திறந்துள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலில் உணவு, தண்ணீர் வழங்கப்படுவதால் பக்தர்களுக்கு எந்த சிரமும் இருக்காது என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை
உத்தவ் தாக்கரே தனது கருத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையை சுமூகப்படுத்த நாளை ஷீரடியில் உள்ள மக்கள், முக்கிய தலைவர்களுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications