சிறையில் தூக்கமின்றி தவித்த சசிகலா... புளியோதரை, ராகி களி சாப்பிட்டார்
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, முதல்நாள் இரவில் தூக்கம் வராமல் தவித்ததாகவும், நேற்று புளியோதரை, ராகி களி சாப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து புதன் கிழமை மாலை பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவும், அவரது அண்ணியார் இளவரசியும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரவு அவர்களுக்கு சப்பாத்தி, களி, சாம்பார் கொடுக்கப்பட்டது. இது சிறையில் எல்லோருக்கும் வழங்கப்படும் சாப்பாடுதான். மற்றபடி இவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. சிறையில் அணியக்கூடிய வெள்ளை நிறத்தில் நீல நிற பார்டர் போட்ட சேலை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தூங்காமல் தவித்த சசிகலா
சப்பாத்தி, சாம்பாரை சசிகலா வேண்டாம் என்று நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. பழங்களை மட்டும் அவர் சாப்பிட்டார். இரவு முழுவதும் அவர் சரியாக தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இளவரசியுடன் பேச்சு
நள்ளிரவு வரை சசிகலா மற்றும் இளவரசி பேசிக்கொண்டிருந்தார்களாம். காலை 5.30 மணிக்கு எழுந்த சசிகலா சில நிமிடங்கள் தியானம் செய்துள்ளார். காலை காபி குடித்தார். பிறகு பத்திரிகைகள் வேண்டும் என்று சிறை ஊழியர்களிடம் கேட்டார். அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளை ஊழியர்கள் வாங்கி வந்து கொடுத்தனராம்.

புளியோதரை, ராகி களி
சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளே சசிகலா உள்பட 3 பேருக்கும் வழங்கப்பட்டது. காலையில் பிஸ்கட், இனிப்பு அல்லாத டீ வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலையில் புளிச்சாதமும், 11 மணிக்கு சாண்ட்விச் கொடுக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பிஸ்கட் மற்றும் டீ போன்றவை வழங்கப்பட்டுள்ளது. முதலில் வேண்டாம் என்று சசிகலா மறுத்துள்ளார். இளவரசி வற்புறுத்தவே பின்னர் வாங்கி சாப்பிட்டாராம்.

போலீஸ் பாதுகாப்பு
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் முன்பு நேற்று சுமார் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிமுகவினர் சிலர் அங்கு வந்து சிறையின் முன்பு சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றனர். வக்கீல்கள் சிலரும் நேற்று வந்து பேசினார்களாம்.

அமைதியாக இருந்த சசிகலா
முதல்நாள் இரவு தூங்காத காரணத்தால் சசிகலா சோர்வாகவே காணப்பட்டுள்ளார் என்று சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.யாருடனும் அதிகமாக அவர் பேசவில்லை என்றும் சிறை ஊழியர்கள் தெரிவித்தனர். சிறிது நேரம் நடந்த அவர், அதிக நேரம் இளவரசியுடனே கழித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications