மவுலிவாக்கம் கட்டிட விபத்து: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீர்நிலைகள் உள்ள பகுதியில் விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த ஜுன் மாதம் 28-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் உள்பட 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீ பெரும்புதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமர்த்தி, ராஜாராமன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இந்த கட்டிட விபத்து குறித்து பொதுநல வழக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்பிடிப்பு பகுதிகளில் விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications