நீட் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மாணவர் கவுசலிங், மாணவர் சேர்க்கைக்கு தடை இல்லை என்று அறிவித்துள்ளது
டெல்லி: நீட் மதிப்பெண் அடிப்படையில் வரும் 17ம் தேதி நடக்க இருக்கும் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என சங்கல்ப் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. நீட் தேர்வில் பீகார் உள்பட பல இடங்களில் தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்கள் வெளியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல, ஒவ்வொரு இடங்களிலும் வினாத்தாள்கள் வெவ்வேறாக இருந்தது. இது அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிரானது.

இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கும் செயல். எனவே, தற்போது நடைபெற்ற நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்பது மனுதாரர் கோரிக்கை.
ஆனால், உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மாணவர் கவுசலிங், மாணவர் சேர்க்கைக்கு தடை இல்லை என்று அறிவித்துள்ளது. தடை வித்தால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் என்றும், இந்த விஷயத்தில், சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். ஜூலை 17ம் தேதி முதல் மருத்துவவ கவுன்சிலிங் தொடங்க உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் தேர்வானவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications