அஃப்சல் குரு 8ஆம் ஆண்டு நினைவு நாள்... காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது
ஸ்ரீநகர்: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற கட்டடத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அஃப்சல் குரு என்ற பயங்கரவாதி.

விசாரணைக்குப் பிறகு இவர், கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். ஆண்டுதோறும் இவர் உயிரிழந்த தினத்தன்று காஷ்மீரில் சில பிரிவினைவாத அமைப்புகள் கடையடைப்பிற்கு அழைப்புவிடுக்கும்.
இந்தாண்டும் சில பிரிவினைவாத அமைப்புகள் இன்றும் மற்றும் பிப்ரவரி 11 ஆம் தேதிகளில் முழுக் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தன. பிப்ரவரி 11ஆம் தேதி மக்பூல் பட் என்ற மற்றொரு பிரிவினைவாதி தூக்கிலிடப்பட்ட நாளாகும்.
கடையடைப்பு குறித்த நோட்டீஸ் ஸ்ரீநகரிலும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகர்களிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நோட்டீஸ்களை யார் எப்போது விநியோகித்தனர் என்பது குறித்த தகவல்களை உறுதி செய்யப் பாதுகாப்புப் படையினரால் முடியவில்லை.
இதன் காரணமாக இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஸ்ரீநகரிலுள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேபோல பொதுப் போக்குவரத்துகளும் பெரும்பாலும் இயங்கவில்லை. ஆனால், தனிநபர்கள் கார்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கின. இதேபோல காஷ்மீர் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதற்கு முன் அஃப்சல் குருவின் நினைவு நாளில் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும். ஆனால், இந்த முறை அப்படி எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதேபோல இணைய சேவையும் முடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications