அனுமார் பெயரை சூட்டினோம், சிரஞ்சீவியாக வந்தார்.. உயிர் பிழைத்த வீரரின் தந்தை உருக்கம்
பெங்களூர்: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு அதிசயமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த ராணுவ வீரர் லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா. ஆயினும் இந்த தகவலை அவரின் குடும்பத்தாருக்கு அரசு தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை வெடித்துள்ளது.
25 அடி ஆழ பனிக்குவியலுக்குள் சிக்கியிருந்தாலும், 6 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் ஹனுமந்தப்பா. டெல்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இன்னமும் ஹனுமந்தப்பா ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இத்தனை நாட்களுக்கு பிறகு ஹனுமந்தப்பா உயிரோடு வந்தது தார்வாரிலுள்ள அவரது பெற்றோர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
"கடவுள் அனுமரை நினைத்து, எனது மகனுக்கு பெயர் சூட்டினோம். எனவே அனுமாரை போலவே எனது மகனும் சிரஞ்சீவியாக மரணத்தை ஜெயித்து வந்துள்ளான்" என்று ஹனுமந்தப்பா தந்தை தெரிவித்தார்.
ஹனுமந்தப்பாவின் உறவினர் ரமேஷ் கொப்பட் 'ஒன்இந்தியாவிடம்' தொலைபேசியில் பேசுகையில், "எங்களது வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்டுள்ளார். ஹனுமந்தப்பாவின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. ஹனுமந்தப்பா உயிரோடு இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
Visuals from rescue efforts in Siachen yesterday after soldiers were buried in an avalanche last week (Source: MoD) pic.twitter.com/koDXI7BI4m
— ANI (@ANI_news) February 9, 2016
அதேநேரம், அரசு தரப்பில் இருந்து அவர் உயிரோடு இருப்பது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் ஹனுமந்தப்பா குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொலைக்காட்சி செய்தியை பார்த்துதான், நாங்கள் அறிந்து கொண்டோம். எனவே, ஹனுமந்தப்பாவை சந்திப்பதற்காக, விமானத்தில், டெல்லி செல்கிறோம்" என்றார்.
ஹனுமந்தப்பா தந்தை மட்டுமின்றி, தாய் பசம்மா, மனைவி மகாதேவி மற்றும் குடும்பத்தை சேர்ந்த மேலும் சிலரும், டெல்லி மருத்துவமனையில் ஹனுமந்தப்பாவை சந்திக்க செல்கிறார்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications