கர்நாடக வறட்சி பற்றி பேச நேரம் ஒதுக்காத மோடி, பன்னீர்செல்வத்தை சந்திப்பதா.. சித்தராமையா சீற்றம்
பெங்களூர்: தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சித்தராமையா கூறியதாவது: நான் காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக, பிரதமர் மோடியை சந்திப்பதற்கு பலமுறை அனுமதி கேட்டிருந்தேன். ஆனால் மோடி, எனக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தற்போது தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு மட்டும் பிரதமர் மோடி, சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி அனுமதியளித்துள்ளார்.

கர்நாடகாவில் 139 தாலுகாக்கள் வறட்சியால் வாடுகிறது. 17 ஆயிரம் கோடி மதிப்புக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய குழு வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்தியுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இது குறித்து பேச மோடியிடம் நேரம் கேட்டதற்கு அவர் தர மறுத்துவிட்டார். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications