தேசப் பாதுகாப்பில் 'சமரசம்' செய்து கொண்ட சில முன்னாள் பிரதமர்கள்: மனோகர் பாரிக்கர் பேச்சால் சர்ச்சை!
மும்பை: நாட்டின் மிக முக்கியமான சொத்தான தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பையில் "விவேக்' என்ற ஹிந்தி வாரப் பத்திரிகையின் தேசப் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு இதழ் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது:

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் வந்த படகு தொடர்பான தகவல்களை வெளியிடுவதாக நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால், அந்தத் தகவல்களை நான் வெளியிடப் போவதில்லை.
ஏனெனில், அவ்வாறு செய்தால் அது தகவல் அளித்தவர்கள் குறித்த ரகசியத்தைக் காக்கத் தவறியதாகி விடும்.
நாட்டின் மிக முக்கியமான சொத்து தேச பாதுகாப்பு. தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களை நாம் காக்க வேண்டியுள்ளது. துரதிருஷ்டவசமாக இத்தகைய ரகசியத் தகவல்களைக் காப்பாற்ற முன்னாள் பிரதமர்கள் சிலர் தவறி விட்டனர்.
எனினும் தங்கள் பெயர் வெளிவாராமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். இது வருத்தமளிக்கிறது. அவர்கள் யார் என்பதை நான் வெளியிட விரும்பவில்லை
பாகிஸ்தான் படகு தொடர்பாக தகவல்களை வெளியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுபோன்ற ஆபரேசன்கள் இனிநடத்தப்பட்டால் மீடியா கேமரா மேன்கள் மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் பேசினார்.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, என்ன மாதிரியான தகவல்களை எந்த பிரதமர் காக்கவில்லை என்பதை மனோகர் பாரிக்கர் பகிரங்கப்படுத்த வேண்டும்.
அப்படி தகவல்களை வெளியிடவில்லை எனில் மனோகர் பாரிக்கர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications