கிரானைட் குவாரி ஓனரிடம் 17 லட்சம் லஞ்சம் வாங்கி மோசடி செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் 17 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியும் கூட கேட்ட வேலையை செய்து கொடுக்காமல் மோசடி செய்த எஸ்.பி. ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்தவர் அஜித். கல் குவாரி உரிமையாளர். சமீபத்தில் இவரது கல் குவாரியை மூட பத்தனம்திட்டா போலீஸ் எஸ்.பி. ராகுல் ஆர்.நாயர் உத்தரவிட்டார்.
இதனால் போலீஸ் எஸ்.பியை சந்தித்த அஜித் தனது கல் குவாரியை திறக்க அனுமதி வழங்கும்படி கேட்டார். அதற்கு எஸ்.பி. ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வழங்கும்படி முதலில் கூறினார். பிறகு ரூபாய் 17 லட்சத்திற்கு சம்மதித்ததால் அந்த பணத்தை அஜித்தும் வழங்கினார்.ஆனால் அஜித்தின் மேலும் ஒரு கல்குவாரியை மூட போலீஸ் எஸ்.பி. உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித் இதுபற்றி கேரள டி.ஜி.பி.யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி நடந்த விசாரணையில் ராகுல் ஆர்.நாயர் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரிய வந்ததால் கேரள அரசுக்கு இதுபற்றி அறிக்கை அனுப்பப்பட்டது.
முதல் கட்டமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையிலும் எஸ்.பி. லஞ்சம் வாங்கியது நிரூபணம் ஆனதால் அவரை சஸ்பெண்ட் செய்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications