ஈழத் தமிழர்களை சிங்களம் பேச சொன்ன இந்திய துணைத் தூதர்- வெளியுறவுத் துறை விளக்கம்
டெல்லி: இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் ஈழத் தமிழர்களை சிங்கள மொழி பேச வேண்டும் என்று இந்திய துணைத் தூதர் மூர்த்தி வலியுறுத்தியது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழர்களிடம்மக்களிடம், இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள், இந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக் கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.

டி. ராஜா கோரிக்கை
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்னை. அதில் தூதரக அதிகாரிகள் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

வெளியுறவுத் துறை விளக்கம்
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, இந்த பிரச்சனை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்றார்.

நிராகரித்த ராஜபக்சே
மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தம் அமலாக்கம் செய்வது சாத்தியமற்றது என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் நிலைப்பாடு இதுவே
இது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும்.

நம்பிக்கையோடு இருக்கிறோம்
இந்த விஷயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றார் சையது அக்பருதீன்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications