இலவச சிகிச்சை கொடுத்தால் கூட அரசு மருத்துவமனைக்கு போவாரில்லை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியர்கள் 75 சதவீதம் பேர் நோய் பாதிப்பு காலத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையையே அணுகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: இந்திய மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் நோயினால் பாதிக்கப்படும் நேரங்களில் சிகிச்சை எடுப்பதற்காக தனியார் மருத்துவமனைகளையே அணுகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி நாட்டில் நான்கில் மூன்று சதவீதம் மக்கள் நோயினால் பாதிக்கப்படும் வேளையில் தனியார் மருத்துவர்களையே அணுகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுகாதாரம் நோய்தன்மை 2004 - 2014 என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் வாழும் 75 சதவீத புற நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாகக் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உள்நோயாளிகள் பிரிவில் 55 சதவீதம் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் மக்களின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணத் தொகையும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் புறநோயாளிகளாக செல்லும் மக்களுக்கு தேவையான நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உளளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு சில இடங்களைத் தவிர எந்நேரமும் புறநோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய நிலை இருக்கிறது. இந்த வசதி அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டால் மக்கள் அரசு மருத்துவமகைளை நாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications