துபாயில் சிக்கிய தாவூத் இப்ராஹிம் கூட்டாளி: தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு வாழ்த்து தெரிவித்த சு.சாமி
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி ஃபரூக் தக்லா கைது செய்யப்பட்டது குறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : துபாய் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி ஃபரூக் தக்லா மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி தேசியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்தியாவில் நடந்த தீவிரவாத வன்முறைச் செயல்களில் இது மிகப்பெரிய சம்பவமாகக் கருதப்படுகிறது.

இந்த வழக்கில் மும்பையின் நிழல் உலக தாதாவாக வலம் வந்த, தாவூத் இப்ராஹிம் சம்பந்தப்பட்டு இருப்பதால், அவரை முக்கிய குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்தது.
இதில் தலைமறைவான தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளி ஃபரூக் தக்லா குறித்து சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் 1995ஆம் ஆண்டு, ஃபரூக் தக்லாவிற்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பரூக் தக்லா,இன்று துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை மும்பை அழைத்து வந்து, தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், இது இந்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான ஃபரூக் தக்லா சிக்கி இருப்பது தாவூத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
We need to compliment NSA Doval for Farooq Takla coming in CBI kitty. Dawood not far off?
— Subramanian Swamy (@Swamy39) March 8, 2018
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், 'தாவூத்தின் முக்கிய கூட்டாளி ஃபரூக் தக்லாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் வாழ்த்துகள். தாவூத் சிக்குவது வெகு தொலைவில் இல்லை' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications