மாணவர்கள் இல்லை.. தெலுங்கானாவின் 400 பள்ளிகள் “காலி” - அதிர்ச்சியளிக்கும் வழக்கு!
டெல்லி: தெலுங்கானாவில் 400க்கு மேற்பட்ட பள்ளிகள் 1 மாணவர் கூட இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த மாநிலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி காலி இடம் அதிகமாக உள்ளது.
7 ஆயிரத்து 974 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக ராஜு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கல்வித்துறை மனு:
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, சிவாகீர்த்திசிங் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தெலுங்கானா மாநில கல்வித்துறை சிறப்பு தலைமை செயலாளர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

மாணவர்கள் ரொம்பக் கம்மி:
அதில், தெலுங்கானா மாநிலத்தில் ஆசிரியர்கள் பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது உண்மை தான். ஆனால் பல பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது இல்லை. இந்த மாநிலத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 139 அரசு ஆரம்ப பள்ளிகள் உள்ளன.

400 பள்ளிகள் காலி:
398 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. 980 பள்ளிகளில் 1ல் இருந்து 10 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். 2 ஆயிரத்து 33 பள்ளிகளில் 11ல் இருந்து 20 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். இதனால் ஆசிரியர்கள் தேவைப்படவில்லை. எனவே அவர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை என்று கூறியிருந்தார்.

வேலைத் தேடி நகரங்களுக்கு:
மேலும் அவர் கூறும்போது, கிராமங்களில் உள்ள மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு சென்றுவிட்டார்கள். எனவே பள்ளிகளில் சேர மாணவர்கள் இல்லை.

தனியார் பள்ளிகளுக்கு முதலிடம்:
மேலும், தனியார் பள்ளிகள் வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாணவர்களுக்கு செய்து கொடுக்கின்றன. எனவே தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறியிருந்தார்.

ஆய்வு நடத்த உத்தரவு:
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளில் நிலவும் நிலைமை குறித்து ஆய்வு நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications