இந்திய ராணுவம் ருத்ரதாண்டவம் ஆடியபோது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்?
டெல்லி: இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது பிரதமர் மோடியின் மேற்பார்வையில் நடந்துள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டு செய்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன,
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 7 தீவிரவாத முகாம்கள் செயல்படுவது குறித்து ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது
* 38 தீவிரவாதிகள் இருந்த 7 தீவிரவாத முகாம்களை உளவுத் துறையின் உதவியோடு ராணுவம் கண்காணித்தது
* பிம்பர்க், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா செக்டார்கள் ராணுவத்தின் கண்காணிப்பில் வந்தன
* அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது
* தாக்குதல் நடத்தப்போவது குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
* அதிரடி தாக்குதல் நடத்துவது என ராணுவம் முடிவு செய்தது
* புதன்கிழமை இரவு கமாண்டோக்கள் விமானத்தில் சென்று பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்தனர்
* சரியாக இரவு 12.30 மணிக்கு தாக்குதலை துவங்கினர்
* கமாண்டோக்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்றனர்
* தரைப்படையினருக்கு விமானங்களில் இருந்த பாரா கமாண்டோக்கள் உதவினர்
* பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தாக்குதலை கண்காணித்தனர்
* எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டோரம் 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் தொலைவில் இருந்த தீவிரவாத முகாம்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டன
* 7 தீவிரவாத முகாம்களையும் ராணுவம் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்
* தாக்குதலை முடித்துக் கொண்டு ராணுவம் 4.30 மணிக்கு இந்திய எல்லைக்கு திரும்பி வந்துவிட்டது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications