வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை... தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
அஹமதாபாத்: வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். வாக்குப்பதிவு எந்திரம் குறித்த அனைத்து விதமான கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி பேசியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடம் அவர் ''குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. எல்லா விதமான ஏற்பாடுகளும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சரியாக நடந்து வருகிறது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தில் ''வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான முறைகேடும் செய்ய முடியாது. வாக்குப்பதிவு எந்திரத்தை யாரும் சேதப்படுத்த முடியாது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''தேர்தல் நடந்த எல்லா இடத்திலும் 'விவிபிஏடி' எனப்படும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களே சரிபார்த்துக் கொள்ள முடியும். எனவே இதில் எந்த விதமான முறைகேடும் நடக்காது. இது குறித்து ஏற்கனவே பல முறை விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது'' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications