தமிழக பாஜக தலைவராக தமிழிசையே நீடிப்பார்... இதில் எந்த மாற்றமும் இல்லை- பாஜக தலைமை
தமிழக பாஜக தலைவராக தமிழிசையே நீடிப்பார் என்றும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.
டெல்லி: தமிழக பாஜக தலைவராக தமிழிசையே நீடிப்பார் என்று பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் டுவிட்டரில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
மாநிலத்துக்கு மாநிலம் உள்ள கட்சிகளில் உள்கட்சி பூசல் என்பது இருக்கத்தான் செய்யும். அதிலும் பாஜக ஒன்றும் விதிவிலக்கல்ல. தமிழக பாஜக தலைவராக தமிழசை சவுந்திரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
அவர் நியமிக்கப்பட்ட காலம் முதல் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் போர்க் கொடி உயர்த்தினர். இந்த கோரிக்கை தொடர்பாக டெல்லிக்கு நடையாய் நடந்தனர். இந்நிலையில் ஆர்கே நகர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

மீம்ஸ்கள்
இதில் நோட்டாவைக் காட்டிலும் பாஜக மிக குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளையே பெற்றது. இதை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் போட்டு பாஜகவை நெட்டிசன்கள் சீண்டினர். இதை சாக்காக வைத்துக் கொண்டு ஆர்கே நகர் தேர்தல் தோல்விக்கு தமிழிசை பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் போர்க் கொடி உயர்த்தினர்.

தமிழிசை விளக்கம்
இதையடுத்து டெல்லிக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் எனக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்றும், ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு என்னுடன் யாரும் வரவில்லை என்றும் தமிழிசை விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தமிழிசை உள்பட மூத்த நிர்வாகிகளிடம் இருந்து பாஜக தலைமை ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டது.

பாஜக தலைமை
இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் ஒரு விஷயத்துக்கு தமிழிசை ஆதரவு தெரிவித்தால், அதை பொன்னார் எதிர்ப்பார், பொன்னார் ஆதரித்தால் அதை தமிழிசை எதிர்ப்பார். இந்த நெருப்பு புகைக்காமல் சிறிது காலம் ஓய்ந்திருந்த நிலையில் தமிழிசைக்கு ஆகாத கோஷ்டியினர் சிலர் தமிழிசையை நீக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பொதுச் செயலாளர் முரளிதரராவ் அறிக்கை அனுப்பியதாக செய்திகளை வெளியிட்டனர். இதை தமிழிசையே மறுப்பும் தெரிவித்தார்.
|
தமிழிசை நீடிப்பார்
இந்நிலையில் இந்த விவகாரம் சூடு பிடித்து வருவதால் பாஜக தலைமை தாமாக முன்வந்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறுகையில் தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார்.

முற்றுப்புள்ளி
அவர் மாற்றப்படவுள்ளதாக கூறும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். உண்மைக்கு புறம்பானவை, உள்நோக்கம் கொண்டவை என்று டுவிட்டரில் முரளிதரராவ் விளக்கமளித்துவிட்டார். எனவே இனி தமிழிசை நீக்கப்படவுள்ளார் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புவோமாக.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications