பிறக்கையில் 763 கிராம், 3 முறை மாரடைப்பு, நிமோனியா: ஒரு பிஞ்சுக் குழந்தையின் போராட்டம்
பெங்களூர்: பெங்களூரில் குறை பிரசவத்தில் 762 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை 3 முறை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிபவர் சவ்ரவ் வியாஸ். அவரது மனைவி நேஹா வியாஸ். கர்ப்பமாக இருந்த நேஹா 6வது மாதத்தின்போது ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதாக அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் உயிரை காக்க வேண்டும் எனில் குறைப்பிரசவத்தில் அதை வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி 7 மாத கர்ப்பிணியான நேஹாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 762 கிராம் எடையுடன் பிறந்தது. மேலும் அதன் நுரையீரல் வளர்ச்சி அடையவில்லை. இதையடுத்து குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது, மேலும் நிமோனியாவாலும் அவதிப்பட்டது. இத்தனை அவதிகளையும் தாண்டி குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
பிறந்து ஆறு மாதமாகும் அந்த குழந்தைக்கு அட்டு என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை தற்போது 3.46 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில்,
தீவிர சிகிச்சைப் பிரிவில் முதன்முதலில் என் குழந்தையை பார்த்தபோது இவ்வளவு சிறிய ஜீவன் இத்தனை பிரச்சனைகளை எப்படி எதிர்த்து போராடுகிறது என்று நினைத்தேன். அவன் தற்போது நலமாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications