உணவு, குடிநீரின்றி கேரளத்தில் தமிழக ஜவுளி வியாபாரிகள், குழந்தைகள் சிக்கித் தவிப்பு
Recommended Video

திருவனந்தபுரம்: உணவு மற்றும் குடிநீரின்றி கேரளத்தில் தமிழக ஜவுளி வியாபாரிகள், குழந்தைகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கேரளத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு கேரளத்தில் இத்தகைய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கனமழையால் இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மொத்தம் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

நீர்நிலைகள் நிரம்பின
இந்நிலையில் கேரளத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளும் அணைகளும் நிரம்பிவிட்டன. இதனால் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் கழித்து இத்தகைய மழை பெய்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
|
மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து
கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. முட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
|
செங்கண்ணூரில் தண்ணீர் தேக்கம்
செங்கண்ணூர் பகுதியில் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் ஆறு போல் ஓடும் தண்ணீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஜவுளி வியாபாரிகள்
கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டம் பேட்டை அங்காடி தபால்நிலைய மாடியில் கடந்த 2 நாட்களாக 70-க்கும் மேற்பட்ட தமிழக ஜவுளி வியாபாரிகள் மற்றும் மலையாளிகள், குழந்தைகள் உணவு, குடிநீரின்றி தவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அரசு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை எடுத்து அவர்களை மீட்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications