கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விபத்து... 9 விவசாயிகள் பலி
கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் 9 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் 9 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. வயல் வேலை முடித்துவிட்டு நெடுஞ்சாலையில் விவசாயிகள் மாட்டு வண்டியில் வந்துள்ளனர்.

அப்போது எதிரில் லாரி ஒன்று மிகவும் வேகமாக வந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி மாட்டுவண்டி மீது மோதியது.
இதில் 9 விவசாயிகளும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications