துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கு: அமித்ஷாவுக்கு கோர்ட் 'குட்டு'
மும்பை: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகமல் இழுத்தடித்து வருவதற்கு நீதிபதி "குட்டு" வைத்துள்ளார்.
2005ம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த சொராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் எனக் கூறி அம்மாநில போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த சொராபுதீன் படுகொலையை பார்த்த ஒரே சாட்சிதான் துளசிராம். இவரையும் 2006ம் ஆண்டில் போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். பின்னர் இந்த இரு சம்பவங்களும் போலி என்கவுன்ட்டர் என விஸ்வரூபமெடுக்க சிபிஐ வசம் வழக்கு போனது.
சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மோடியின் வலதுகரமான அமைச்சர் அமித் ஷாவை 2010ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி கைது செய்தது. 3 மாதம் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே துளசிராம் போலி என்கவுன்ட்டர் வழக்கு குறித்து விசாரணை நடத்திய சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் அமித் ஷா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேரின் பெயர்கள் இடம்பெற்றன.
மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் வழக்கு விசாரணையின் போது அமித்ஷா ஆஜராகாமல் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து விலக்கு கோரி வருகிறார்.
இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அமித் ஷா ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஒவ்வொரு முறையும் இப்படியே ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஆஜராகாமல் இருக்கிறீர்களே என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications