செல்போன்களால் பலாத்காரங்கள் அதிகரிக்குதா.. டிவிட்டரில் 'கருத்துத் தீ'யை பற்ற வைத்த மக்கள்!!
பெங்களூர்: பலாத்காரங்களை தவிர்க்க பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கையை கிண்டல் அடித்து ட்விட்டரில் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான சட்டசபை குழு தலைவர் சகுந்தலா ஷெட்டி எம்.எல்.ஏ. அம்மாநில சட்டசபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். பெண்கள் கடத்தப்படுவது மற்றும் கற்பழிப்படும் சம்பவங்களுக்கு செல்போன் காரணமாக உள்ளது. கலந்துரையாடலில் நாங்கள் இதை கண்டறிந்தோம். எனவே, பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பலரும் ட்விட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்போன்கள்
செல்போன் வருவதற்கு முன்பு பாலியல் பலாத்காரங்களே நடக்கவில்லை என்பதை கர்நாடக எம்.எல்.ஏ. நிரூபிக்க வேண்டும். இதை கேட்டு கழுதைகளுக்கு கூட உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஹேமந்த் குமார் தேசாய் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
முன்னேறிய நாடு
செல்போன்களால் தான் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன என்று அறிக்கை சமர்பித்துள்ளனர். நாம் முன்னேறிய நாடு என்று அறிவிக்கப்பட இது போன்று மேலும் பல அறிக்கைக
ள் சமர்பிக்கப்பட வேண்டும் என நிகில் தெரிவித்துள்ளார்.
|
ஆணுறை
ஆணுறைகளால் செக்ஸ் நடக்கிறது. செல்போன்களால் பலாத்காரங்கள் நடக்கிறதாம், என்ன ஒரு லாஜிக் என்று பிர்லோசா ட்வீட் செய்துள்ளார்.
|
காப் பஞ்சாயத்து
பலாத்காரம் செய்பவர்கள் செய்வார்கள். செல்போன்கள் செய்யாது. பலாத்காரங்கள் அதிகரிக்க செல்போன்கள் தான் காரணம் என்று கூறி கர்நாடக எம்.எல்.ஏ. காப் பஞ்சாயத்து ஆள் போன்று நடந்து கொள்கிறார் என கவிதா கிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
நிர்பயா
செல்போன், சவ்மெய்ன், டிவி, பேப்பர், பென்சில் எல்லாம் பலாத்காரத்திற்கு காரணம் என்று குறைகூறுங்கள். ஆனால் நிர்பயா வழக்கில் அந்த மைனருக்கு தண்டனை மட்டும் வழங்கமாட்டீர்கள் என ஷிவாங்கி முத்து தெரிவித்துள்ளார்.
|
எம்.எல்.ஏ.
செல்போன்களால் பாலியல் பலாத்காரங்கள் ஏற்படுவதாக கர்நாடக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அம்மா பெண்ணே நீங்களும் பல ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்துகிறீர்கள். அது உங்களை பாதுகாப்பாக வைத்துள்ளது. ச்சே.. என்று வைபவ் குப்தா தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications