சசிகலாவைப் போலவே முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் சலுகைகள்: ரூபா அறிக்கையில் பகீர்
பெங்களூரு சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதைப்போலவே போலி முத்திரைத்தாள் மோசடிமன்னன் தெல்கிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று டிஐஜி ரூபா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டத்தைப் போலவே, போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் பல்வேறு சலுகைகள் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது இப்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்து டிஐஜி ரூபா கொடுத்த புகார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், தனி சமையலறை, டிவி, சொகுசுப்படுக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அது குறித்து டிஐஜி ரூபா எழுதிய புகார் கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் அந்தக் கடிதத்தில் மேலும் பலருக்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தது குறித்து விளக்கமாக, ரூபா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவை எதுவும் வெளியுலகுக்கு வராமல் போய்விட்டது.
இந்த நிலையில், தற்போது போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் பல்வேறு சிறப்புச் சலுகைகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம், வெளியாகி மீண்டும் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பரப்பன அக்ரஹாரா ஆண்கள் சிறையில் முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில், மசாஜ் செய்ய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மேலும் பல தனிப்பட்ட சொகுசு வசதிகளும், சலுகைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக டிஐஜி ரூபா தனது புகார் கடிதத்தில் கூறியிருந்தார். அதைப்போலவே தெல்கி உட்பட பல கைதிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டே, சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் சிலர் இது பற்றிக்கூறுகையில், கைதிகளுக்கு சலுகைகள் செய்துதரப்படுவது பற்றி சிறைத்துறை விதிமுறைகளிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் கொடுத்தால்தான் சலுகைகள் கைதிகளுக்கு கிடைக்கும் என்று சில அதிகாரிகள் கூறி, அதனை, செய்து தருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications