இந்து எதிரிகளை அழிக்க 15,000 பேருடன் ராணுவத்தை உருவாக்கவும் ப்ளான் - தீவிரவாதி தாவ்டே 'ஷாக்' தகவல்
மும்பை: இந்துக்களுக்கு எதிரானவர்கள் மீது தாக்குதலை நடத்த 15,000 பேர் கொண்ட தனி ராணுவம் ஒன்றை உருவாக்க 'சனாதன் சன்ஸ்தா' இந்துத்துவா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டிருந்ததாக அந்த இயக்கத்தின் தாவ்டே சிபிஐ விசாரணையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2009-ம் ஆண்டு கோவா குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சனாதன் சன்ஸ்தன் என்ற இந்துத்துவா தீவிரவாத இயக்கம்தான் காரணம் என சிபிஐ கண்டறிந்தது. இந்த இயக்கத்தின் தலைவர் அகோல்கரை தேடிய போது அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தற்போது அகோல்கரைப் பிடிக்க இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சனாதன் சன்ஸ்தன் இயக்கத்தின் மற்றொரு தீவிரவாதி தாவ்டே கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது தாவ்டேவுக்கும் அகோல்கருக்கும் இடையேயான 25 தொலைபேசி உரையாடல்களை சிபிஐ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே இ மெயில்களில் எந்த மாதிரியான கோட்வேர்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை தாவ்டே சிபிஐ அதிகாரிகளிடம் விவரித்திருந்தார்.
சிபிஐ அதிகாரிகளைப் பொறுத்தவரையில் தபோல்கர், பன்சாரே, கல்பர்க்கி மற்றும் கோவா குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான முக்கிய ஆதாரமாக தாவ்டேவை கருதுகிறது... அதாவது ஒரே கல்லில் 4 பறவைகளை வீழ்த்திய திருப்தியில் சிபிஐ அதிகாரிகள் இருக்கின்றனர்.
இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசியதால்தான் கல்புர்க்கியை இக்கும்பல் படுகொலை செய்திருக்கிறது. அத்துடன் 15,000 பேரை கொண்ட தனி ராணுவம் ஒன்றை உருவாக்கி இந்துக்களுக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தாங்கள் திட்டமிட்டதாகவும் விசாரணையில் தாவ்டே கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியான விசாரணையில் பல அதிர வைக்கும் தகவல்களை தாவ்டே வெளியிட்டு வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications