கிரேவால் மனநிலை பாதிக்கப்பட்டவரா..? எரிகிற தீயில் எண்ணெய் விட்டு சர்ச்சையில் சிக்கிய விகே சிங்
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி போராடி தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் மனநிலை பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய இணைய
டெல்லி: தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய இணையமைச்சர் விகே சிங்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என பாஜக உறுதியளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவ்வாறு டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் திடீரென நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் விகே சிங்கிடம், கிரேவாலின் தற்கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதிய பிரச்னைதான் அவரது தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனப் பதிலளித்தார்.
ஏற்கனவே, கிரேவாலின் உடலைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விகே சிங் இவ்வாறு கிரேவாலை விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விகே சிங்கின் இந்த கருத்துக்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், "இவ்வாறு கேள்வி எழுப்புவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் வி.கே.சிங். இறந்த வீரர் ஜனாதிபதியிடம் இருந்து 2 முறை பதக்கம் பெற்றவர், மேலும் ராணுவ தலைமை தளபதியிடம் ஒரு முறை பதக்கமும் பெற்று சிறந்த ராணுவ வீரராக திகழ்ந்தவர்'' என தெரிவித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்பிஎன் சிங் இது குறித்து கூறுகையில், 'வீரரின் மனநலம் குறித்து கேள்வி எழுப்புவது தங்கள் தகுதிக்கு ஏற்றதில்லை' என கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications