எங்களை அகதிகள் போல நடத்துகிறார்கள்.. தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் கதறல்
எங்களை அகதிகளைப் போல நடத்துவதால் அனைவரின் கவனத்தை ஈர்க்க தற்கொலைக்கு முயற்சி செய்ததாக டெல்லியில் மரத்தின் மீதேறி போராடிய விவசாயிகள் கூறியுள்ளனர்.
டெல்லி: எங்களின் போராட்டத்திற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. எங்களை அகதிகளை போல நடத்துகின்றனர் என்று டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கூறியுள்ளனர். பிரதமர், அமைச்சர்களை சந்திக்க விடாத காரணத்தால் அவர்களின் கவனத்தை ஈர்க்கவே மரத்தின் மீதேறி போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மரத்தில் ஏறி தூக்குப்போடுவது, பிச்சைஎடுப்பது, தெருவில் படுத்து புரள்வது, மொட்டையடிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். தெருவிலேயே உண்டு
உறங்கி 12 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று பாடை கட்டியும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

மரத்தின் மீது போராட்டம்
இந்த நிலையில் திடீரென விவசாயிகள் அகிலன் ரமேஷ் ஆகியோர் மரத்தின் மீதேறி குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் பதற்றம் உருவானது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நடிகர்களும் விவசாயிகள் கீழே இறங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

கவனத்தை ஈர்க்க போராட்டம்
இதனையடுத்து விவசாயிகள் கீழே இறங்கினர். செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி ரமேஷ், கடந்த 12 நாட்களாக தெருக்களில் போராடும் தங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று வேதனையுடன் கூறினார். மக்களின் கவனத்தை கவர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி
எல்லோரும் வருகிறார்கள், போகிறார்கள், தீர்வு கிடைக்கவில்லை. அமைச்சர்களை நேரில் சந்தித்து பேச நேரம் கொடுக்கவில்லை. தின்பண்டத்தை காண்பித்து ஏமாற்றுவதை போல எங்களை ஏமாற்றுகிறார்கள். அமைச்சர்கள், எம்.பிக்கள் எங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் தற்கொலைக்கு முயன்றோம் என்றார்.

அவமானப்படுத்துவதா?
தொடர்ந்து பேசிய அகிலன், வங்கிக்கடன் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதோடு அவமானப்படுத்துவதாகவும் கூறினார். பிரதமர், அமைச்சர்களை சந்திக்க விடாமல் தடுப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications