மே.வங்கம்: பானி பூரி சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி.. மருத்துவமனையில் அனுமதி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் பானி பூரி சாப்பிட்ட 100க்கும் அதிகமானோர் வாந்தி பேதியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹூக்ளி மாவட்டத்தில் சுகந்தா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட டோகாசியா பகுதியில் சாலையோரத்தில் பானி பூரி விற்பனை செய்யப்பட்டது. அந்த பானி பூரி கடையில் வழக்கமான பானி பூரிதான் விற்பனை செய்யப்பட்டது. அக்கடையில் 10 பானி பூரி ரூ30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

டோகாசியா பானி பூரி கடையில் பானி பூரி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்துள்ளனர்; அவர்களில் பலருக்கும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பானி பூரி சாப்பிட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அப்பகுதி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. டோகாசியா, பகிர் ரனகச்சா மற்றும் மகால்டா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுகாதாரத்துறையின் சிறப்பு குழுவை மாநில அரசு உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை அக்குழு வழங்கி சிகிச்சை அளித்தது. இது மேற்கு வங்கத்தில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications