மேற்கு வங்கத்தில் திதீக்கு தீ வெற்றி... ஹாட்ரிக் முதல்வராகும் மமதா பானர்ஜி - விடாமல் விரட்டும் பாஜக
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார் என்று என்று ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் சி வோட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ரிபப்ளிக் டிவி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு மட்டும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Recommended Video
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது. ஆட்சியை பிடிக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
கம்யூனிஸ்ட்களின் கைகளில் இருந்த மேற்கு வங்கத்தை 2011ஆம் ஆண்டு கைப்பற்றினால் மமதா பானர்ஜி. 2016ஆம் ஆண்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வரானார். இந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பல வியூகங்களை அமைத்து பிரசாரம் செய்துள்ளார் மமதா பானர்ஜி.

பல ஆண்டு கனவு
முதல்முறையாக ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என்று பாஜக தீவிரமாக களம் இறங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தலைவர்கள் ஆடுபுலி ஆட்டத்தைத் தொடங்கி விட்டனர்.

முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள்
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அமைப்பார் என்று பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மமதா கைகளில் மீண்டும் மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 148 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம்.
மமதா பானர்ஜி மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டிஎம்சி வெற்றி வாய்ப்பு
ETG ரிசர்ச் எக்ஸிட் போல் முடிவுகளில் டிஎம்சி 164 -176, பாஜக 105 - 115, காங்கிரஸ் 10-15 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. P- MARQ எக்ஸிட் போல் முடிவுகளின் படி டிஎம்சி 152 - 172, பாஜக 112 -132, காங்கிரஸ் இடதுசாரி கூட்டணி கட்சிகள் 10 -20 இடங்களில் வெல்லும் என தெரிவித்துள்ளது.

பரிதாப நிலையில் காங்கிரஸ் கூட்டணி
ஏபிபி சி - சி வோட்டர் நிறுவனம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் டிஎம்சி 152 -164, பாஜக 109 -121, காங்கிரஸ் கூட்டணி 14-25 இடங்களில் வெல்லும் என தெரிவித்துள்ளது. சிஎன்என் நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில் டிஎம்சி 162, பாஜக 115, காங்கிரஸ் இடதுசாரி கூட்டணி 15 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

ஹாட்ரிக் வெற்றி
டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 158 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பாஜகவிற்கு 115 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு மொத்தம் 19 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

பாஜக கைகளில் ஆட்சி
ரிபப்ளிக் டிவி சிஎன்எக்ஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. டிஎம்சி 128 -138, பாஜக 138 -148 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 11 -21 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

வியூகம் வெற்றி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் மம்தா பானர்ஜிக்கு பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகம் வெற்றிப்பாதையை காட்டியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 211 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கடுமையாக மோதி ஆட்சியை தக்க வைப்பார் என்பது தெரியவந்துள்ளது.

மக்கள் தீர்ப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் மே 2ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்குமா? மக்கள் என்ன தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications