50 கோடி பேருக்கு பலன் தரும் அரசு காப்பீடு திட்டம் 'ஆயுஷ்மான் பாரத்' என்றால் என்ன?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிவைத்த ஆரோக்கிய காப்பீடு திட்டத்தின் பெயர் 'ஆயுஷ்மான் பாரத்'.
இது ஒரு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம். நாடு முழுக்க ஏழை, எளிய 10 கோடி குடும்பங்களுக்கு (ஏறத்தாழ 50 கோடி பலனாளிகள்) ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரையில் மருத்துவமனை செலவீனங்களை ஏற்கும் திட்டம் இதுவாகும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- ஆயுஷ்மான் பாரத்- ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான ஆரோக்கிய காப்பீடு திட்டம்.
- இதயம், கிட்னி, கல்லீரல் பிரச்சினைகள் உட்பட 1300 வகை நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.
- சமீபத்திய சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு படி, 8.03 கோடி ஊரக குடும்பங்கள், 2.33 கோடி நகர்ப்புற குடும்பங்கள் இந்த காப்பீடுக்கு தகுதி படைத்தவர்கள்.

- குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, வயது, பாலினம் குறித்த எந்த தடையும் இந்த திட்டத்தில் இல்லை.
- குடும்பத்திலுள்ள தகுதி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்குமே திட்டத்தின் பலன் கிடைக்கும்.
- உடல் நலக்குறைவால் ஒருவேளை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர வேண்டி வந்தால் பணம் செலுத்த தேவையில்லை.

- மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் முன்பாக நோய் ஆரம்பித்த காலம் முதல், வீடு திரும்பிய பிறகு வரையிலான செலவுகள் காப்பீட்டில் அடங்கும்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டை தேவை. ஆதார் கட்டாயம் கிடையாது
- நாடு முழுக்க உள்ள அரசு மற்றும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் இந்த காப்பீடு செல்லுபடியாகும்.

- மாநில ஆரோக்கிய ஏஜென்சி அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களில்தான் இந்த காப்பீடு திட்டம் அமல்படுத்த முடியும்.
- மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பாக அங்குள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
- அடையாள உறுதிப்படுத்துதல் பணி மேற்கொள்ளப்படும்
- சாப்ட்வேர் மூலமாக பலனாளி விவரம் பதியப்படும் என்பதால் எளிதாக மருத்துவமனை நிர்வாகத்தால் பலனாளிகளை கண்டறிய முடியும்.
- பலனாளிக்கு இ-கார்டு கொடுக்கப்படும்.
- இ-கார்டு மருத்துவரிடம் அளிக்கப்பட வேண்டும்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications